ஆம்பூர் |

திருப்பத்தூரில் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை திருடிய நபர் கைது

திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் பையாஸ் (48) இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல வீட்டின் அருகே தனது பசு மாட்டை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் திடீரென அதில் ஒரு பசுமாடு காணாமல் போனது. இதனை அறிந்த பையாஸ் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தனது மாட்டை காணவில்லை என புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகர போலீசார் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்குரிய வகையில் நபர் ஒருவர் பசுமாட்டை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.  அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த பிரசாந்த் (30) என்பவர் பையாஸ் வீட்டில் மாடு திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் காரணமாக திருப்பத்தூர் நகர போலீசார் பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பசுமாட்டை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு
Top 10 viral news 🔥
Jan 29, 2025, 14:01 IST/

கல்லூரி மாணவனுடன் பேராசிரியை திருமணம்.. வீடியோ வைரல்

Jan 29, 2025, 14:01 IST
மேற்குவங்கம் மாநிலத்தில் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர், அங்கு பயிலும் முதலாம் ஆண்டு மாணவனை திருமணம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. நாடியா மாவட்டத்தின் ஹரிங்கட்டாவில் உள்ள மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பல்கலை.யில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ உளவியல் துறையின் நாடக ஒத்திகைக்காக எடுக்கப்பட்ட வீடியோ என அந்த பேராசிரியை கூறிய நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.