டாப் 10 வைரல் பதிவுகள் 🔥
ஜெர்மனியில் அணு உலைகள் மூடல்
உலக செய்திகள் |

ஜெர்மனியில் அணு உலைகள் மூடல்


ஜெர்மனி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அணுசக்தி பயன்பாட்டை நிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்த ஜெர்மனி, தற்போது செயல்பட்டுவரும் கடைசி மூன்று அணு உலைகளையும் மூடிவிட்டது. அணுசக்தியை பயன்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, கடந்த ஆண்டு இந்த அணு உலைகளை மூட முடிவு செய்தது. இருப்பினும், ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவுகளால், மின் நெருக்கடி தொடர்ந்ததால் இந்த முடிவில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அணு சக்தி பயன்பாட்டிலிருந்து முழுமையாக வெளியேறுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இந்த முடிவை எடுக்கும் முதல் ஐரோப்பிய நாடு ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகள்

தமிழ்நாடு


Apr 17, 2023, 05:04 IST/

வைக்கோல் லாரி எரிந்து நாசம் - வீடியோ

Apr 17, 2023, 05:04 IST
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோல் நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒட்டுனர் கண்ணன் (45). லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு விற்பனைக்கு எடுத்துச் சென்றார். அந்த லாரி கொளத்தூர் அருகே வந்தபோது மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் மற்றும் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தன. விபத்தில் காயம் அடைந்த ஓட்டுனர் கண்ணன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு
திருப்பூர்

Apr 17, 2023, 05:04 IST/உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை

உடுமலை நகராட்சி பூங்கா முன்பு குடிமகன்கள் அட்டகாசம்!!

Apr 17, 2023, 05:04 IST
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட்ட 4-வது வார்டு பகுதியில் சுமார் 25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது நகராட்சி பூங்கா பணிகள் முடிந்தும் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது இதை பயன்படுத்திக் கொண்டு இரவு மற்றும் பகல் நேரங்களில் குடிமகன்கள் இப்பகுதியில் மது குடித்துவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமானால் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது மேலும் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் திறக்கப்படாமல் உள்ள நகராட்சி பூங்காவை திறக்க நகராட்சி நிர்வாக ம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது
வீடியோக்கள்

வைக்கோல் லாரி எரிந்து நாசம் - வீடியோ

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோல் நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒட்டுனர் கண்ணன் (45). லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு விற்பனைக்கு எடுத்துச் சென்றார். அந்த லாரி கொளத்தூர் அருகே வந்தபோது மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் மற்றும் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தன. விபத்தில் காயம் அடைந்த ஓட்டுனர் கண்ணன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வேலைகள்