திருவாரூர் |

திருவாரூரில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், குஜராத்தில் முதலமைச்சராக மோடி இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்தது குறித்தும் விளக்கமாக எடுத்து கூறி கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு