
அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை.. ஆசிரியர்களே காரணம் என கடிதம்
தூத்துக்குடி: முத்துகிருஷ்ணன் (15) அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். முத்துகிருஷ்ணனை ஆசிரியை ஒருவர் கம்பால் அடித்ததால் அவர் தற்கொலை செய்ததாக பெற்றோர் புகாரளித்தனர். மாணவர் எழுதியிருந்த கடிதத்தில், "என் சாவுக்கு காரணம் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பியூலா, மேரி மற்றும் தலைமை ஆசிரியர்தான்” என எழுதியிருந்தது. இந்த சம்பவத்தில் நால்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.