உழவன் செயலியை பதிவிறக்கி இடுபொருட்கள் பெறலாம் - வேளாண் துறை
தஞ்சாவூர் |

உழவன் செயலியை பதிவிறக்கி இடுபொருட்கள் பெறலாம் - வேளாண் துறை

தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கூறியதாவது: குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின்கீழ் நெல் சாகுபடியில் அதிக விளைச்சலை உறுதி செய்யும் நோக்கில், நெல் சான்று விதைகள் 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வழங்க உள்ளது. குறுவை நெல் இயந்திர நடவிற்காக பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 4 ஆயிரம் வழங்க உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் உரிய இயந்திர நடவுக்கான ரசீது, சிட்டா அடங்கல் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு 8 கிலோ, இதனுடன் 50 சத சாகுபடியில் வீத மானியத்தில் உயிர் உரமான 50 சதவீத மானியத்தில் ஒரு கிலோ உயிரியல் கட்டுப்பாட்டு காரணியான சூடோமோனாஸ் அல்லது ட்ரைகோடெர்மாவிரிடி ரூ. 42 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படுகிறது. மேலும், நெல் நுண்ணூட்டக்கலவை ஏக்கருக்கு 5 கிலோ, பயறு வகை நுண்ணூட்டக் கலவை ஏக்கருக்கு 2 கிலோ, ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ, ஜிங்க்சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ ஆகிய உரங்கள் 50 சதவீத மானியத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட மானியங்களை பெற உழவர் செயலியை பயன்படுத்தி விவசாயிகள் பதிவு செய்து குறுவை தொகுப்பு திட்டத்தினை பயன்படுத்தி உயரிய மகசூலை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு