தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ரிஷிவந்தியம் |

தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தொண்டு நாள் வாரத்தை முன்னிட்டு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிலிண்டரில் தீப்பிடித்தால் அணைப்பது எப்படி, கூரை வீடு தீப்பற்றிக் கொண்டால் தகவல் கொடுப்பது குறித்தும், கூரை வீட்டில் தீப்பற்றி எரியும்போது உள்ளே சிக்கியவர்களை மீட்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலை அலுவலர் ராமச்சந்திரன், பரமசிவம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

வீடியோஸ்