வேலூர் நகரம் - Vellore City

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை!

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை!

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டி வேப்பமரம் பல ஆண்டுகளாக வளர்ந்து வந்தது. இந்தநிலையில் சில மாதங்களாக மரத்தின் வேரால் அந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது. மேலும் சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் சாயும் நிலையில் இருந்தது. பள்ளி குழந்தைகளும் அதன் அருகே அமர்வது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். எனவே விபரீதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அந்த சுவர் இடிக்கப்பட்டது. இதனால் தற்போது பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా