வேலூர் நகரம் - Vellore City

பண மோசடி: கணவன் மனைவி சிறையில் அடைப்பு!

வேலூர் ஓல்ட் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி. இவர் முத்தூட் ஹவுசிங் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் கிளையில் கடன் வசூல் செய்யும் நிர்வாகியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் சேர்ந்து நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 14 நபர்களிடமிருந்து ரூபாய் 13 லட்சத்து 12 ஆயிரத்து 84 ரூபாயை வசூல் செய்து உள்ளார். வசூல் செய்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் பணத்தை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பைனான்ஸ் அதிகாரி கிரன்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சாரதி வழிகாட்டுதலின்படி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட ரஜினி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా