தொண்டாமுத்தூர் |

போதை பொருள் விற்பனை துணைநடிகர் உள்பட 5 பேர் கைது

கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று துணை நடிகர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமலாக்க பிரிவு பிரிவு போலீசார் கோவை சுங்கம் புறவழிச்சாலை தனியார் கல்லூரி அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சினிமா துறையில் வேலை செய்யும் துணை நடிகர்களான கோவை புல்லுக்காடு பகுதியைசேர்ந்த யாசிக் இலாகி, போளுவாம்பட்டியைச்சேர்ந்த மரியா, தாழியூரைச்சேர்ந்த சினேகா ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் போதை மாத்திரை, கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதே போல் ஆர். எஸ். புரம் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணன் , சாரமேடு பகுதியைச்சேர்ந்த முஜிபூர் ரகுமான் ஆகிய இருவரிடமும் சோதனை செய்ததில் அவர்களிடமும் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐவரிடமிருந்தும் ஒரு கிலோ 410 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருட்களை சப்பளை செய்த கள்ளாமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிக், ரிஸ்வான், வட மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ஆகிய நான்குபேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு