தொண்டாமுத்தூர் |

மறு தேர்தல் நடத்த வேண்டும்; அண்ணாமலை கோரிக்கை

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இந்நிலையில், கரூரில் தனது வாக்கை செலுத்தி விட்டு கோயம்புத்தூர் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது கோயம்புத்தூர் பகுதியில் வாக்குப் பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வாக்களிப்பதற்காக ஆர்வமாக இங்கு வருகின்றனர். கணவருக்கு ஒரு வாக்கு சாவடி, மனைவிக்கு மற்றொரு வாக்குச் சாவடி மையத்திலும் ஒதுக்கப்பட்டு உள்ளது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பா பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. ஒரு பாராளுமன்ற தொகுதியின் ஒரே இடத்தில் இருந்து 830 வாக்காளர்களின் பெயர்கள் எந்த அடிப்படையில் நீக்கப்பட்டு உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இந்த வாக்கு சாவடி மையத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பாஜக சார்பில் இதற்கான போராட்டமும் தீர்வையும் தேடி வருகிறோம். இருந்தும் மக்கள் உற்சாகமாக தங்களது வாக்களிக்கும் உரிமையை செய்து வருகின்றனர்.தேர்தல் ஆணையம் முதியோர்களுக்கான போக்குவரத்து வாகன ஏற்பாடு செய்வதிலும் சுணக்கம் காட்டி உள்ளது. இருந்தும் மக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனர் என்றார்.

வீடியோஸ்


தமிழ் நாடு
Apr 19, 2024, 05:04 IST/

அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு

Apr 19, 2024, 05:04 IST
ஒரே ஒரு வாக்கு வரலாற்றையே மாற்றும் தன்மை கொண்டது. வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாமல் சிறந்த அரசு நிர்வாகத்தை மட்டும் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக முடியும். பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு செலுத்திய பிறகு உங்கள் விரலில் மை அடையாளத்துடன் செல்ஃபி எடுத்து, லோக்கல் ஆப்பில் பகிரவும். அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு வழங்கப்படும். புகைப்படத்தை பதிவிட முதலில் உங்கள் மொபைலில் உள்ள லோக்கல் ஆப்பை க்ளிக் செய்யவும். பின்னர் முகப்புத் திரையில் உள்ள '+' பொத்தானைத் தட்டவும். பிறகு 'வாக்குப்பதிவு செல்ஃபி போட்டி' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது + பட்டனை அழுத்தி உங்கள் செல்ஃபி போட்டோவை சேர்க்கவும். தலைப்பில் "#My Vote My Right" என்று பதிவிடவும். அதன் பிறகு, உங்கள் விவரங்களை உள்ளிட்டு, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.