மேலூர் |

மேலூர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை

மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் மழை: தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் பெருகி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தெற்குத்தெரு, சூரக்குண்டு, கீழவளவு, கிடாரிப்பட்டி, கொட்டாம்பட்டி, வெள்ளலூர், திருவாதவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக விட்டு விட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் மழை காரணமாக பகலிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவு வருவதோடு, நீர் நிலைகளும் பெருகி வருவதால் விவசாயிகளும் மற்றும் பொது மக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

வீடியோஸ்