திருப்பத்துார் டவுன் - Tirupathur Town

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்த வேண்டும்

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்த வேண்டும்

திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் வி. நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பத்தூரில் 36 வார்டுகளிலும் பொதுமக்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். திருப்பத்தூர் நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள், குத்தகைகள், சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை பொதுமக்கள் செலுத்தி நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்க்க நகராட்சித் தலைவர் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా