
நத்தம்
கடன் பிரச்சனை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல், காட்டாஸ்பத்திரி பின்புறம் ஸ்டேட்பேங்க் காலனி பகுதியை சேர்ந்த திலீப்குமார்(23) இவர் கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திலீப்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.