முசிறி |

ஊரை விட்டு ஒதுக்கிய குடும்பங்கள் - மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கரட்டுப்பட்டியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015ல் அங்குள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அப்பொழுது தங்கராஜ் என்பவர் தனது செலவில் மூலவர் காளியம்மனுக்கு கற்சிலையை செய்தார். அந்த சிலையை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரி ராஜலிங்கம் மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் அந்த கற்சிலையை எடுத்து வீதியில் வீசி எறிந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ராஜலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன், மாரியப்பன், மணி உட்பட 4குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்க வைப்பதாக தெரிவித்தார். தற்போது ராஜலிங்கம் கிராமத்தில் சேர வேண்டுமானால் ரூபாய் 2லட்சம் பணம் தனக்கு வழங்க வேண்டும் என கூறுகிறார். இந்நிலையில் கிராமத்தில் காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 4ம்தேதி விசாரணைக்கு வந்த வட்டாட்சியர் செல்வம் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அழைத்தார். அங்கு ராஜலிங்கம் தரப்பில் கோயிலில் பொங்கல் வைக்கவும், சாமி கும்பிட அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதைக் கேட்ட வட்டாட்சியர் ஒரு தலைபட்சமாக முடிவுகளை தெரிவித்தார். எனவே மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு