இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமம் மின்னல் பங்களா என்ற இடத்தில் இன்று காலை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆனந்தன், சேட்டு ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.