துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்!
திருவைகுண்டம் |

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் "தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்ற முறையில் தொகுதிக்கு உட்ப்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். 15ம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில் கீழத்தட்டாப்பாறை கிராமத்தில் வாக்கு சேகரித்துவிட்டு வெளியே வரும் போது அங்கே ஊர் பாலத்தில் காத்திருந்த வாலிபர்களில் ஒருவர் என்னை உடைந்த கண்ணாடி பாட்டிலால் குத்த முயன்றார். நான் சமயோசிதமாக தப்பித்து சென்று காவல் துறையின் அவசர எண் 100 க்கு அழைத்து எனது புகாரை பதிவு செய்தேன். தட்டப்பாறை காவல் நிலைய அதிகாரிகள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர். குற்றவாளியை நான் அடையாளம் காண்பித்தேன். ஆனால் எனது புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது மேலும் எனக்கு பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை தமிழக காவல்துறை எடுக்கவில்லை. நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர் எனக்கே இந்த நாட்டில் இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலையை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது. உடனடியாக எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கி எனது பாதுகாப்பை உறதி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்