
தூத்துக்குடி: பொங்கல் பரிசு.. முக்கிய தகவல்
தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 1.47 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெறவதாக அவர் கூறினார். பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு வாங்காதவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் சென்று சீக்கிரம் வாங்கிக் கொள்ளுங்கள்.