அரூர் |

மோடியை வெளுத்து வாங்கிய ஈஸ்வரன்

திமுக வேட்பாளர் ஆ. மணியை ஆதரித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டத்தில்கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் E. R. ஈஸ்வரன்,. கலந்து கொண்டு ஏன் மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்குக் காரணம் தமிழகத்தில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது. சிறுகுறு விவசாயிகள் நசுக்கப்படுகிறார்கள். அத்தனைக்கும் காரணம் மோடி அரசால் கொண்டுவரப்பட்ட கொள்கையின் விளைவு. தமிழகத்திற்கு மோடி என்ன செய்தார் என்றால் கடலுக்கு அடியில் சாமி கும்பிடுகிறார், வானத்தில் பறந்து கொண்டு சாமி கும்பிடுகிறார், திருவள்ளுவர் சிலையை தோளில் சுமந்து கொள்கிறார், தமிழில் கூட பேசுவார் ஆனால், வெள்ளம் நிவாரண நிதி மட்டும் கொடுக்க மாட்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டு நிதியை மட்டும் கொடுக்க மாட்டார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதியே கொடுக்கவில்லை ஆனால், ஓட்டு கேட்பதற்கு மட்டும் பத்து முறை வருவார். 11 வது முறை மட்டுமல்ல எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் பிஜேபி வீழ்ந்து கொண்டிருக்கிறது என்று பேசினார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருக்க முடியாது இதுதான் பாஜகவின் நிலைப்பாடு எனப்பேசி திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

வீடியோஸ்