பாலக்கோடு |

காரிமங்கலம் அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அடுத்த குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முனி யப்பன் கூலித்தொழிலாளி. இந்த நிலையில் நேற்று காலை கூலி வேலைக்காக முனியப்பன், அவருடைய மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். மீண்டும் வேலை முடிந்து இரவு வீட்டிற்குவந்து பார்த்த போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்போது பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூபாய் 14 ஆயிரம் திருடப் பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு