வேப்பனஹள்ளி
குப்பை கொட்டிய தகராறில் பெண் மீது தாக்குதல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்துள்ள சோமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜிபேதா (44) சம்பவம் அன்று அந்த பகுதியல் குப்பை கொட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவருக்கும் இந்த பகுதியை சேர்ந்த ரஜியா (28) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜிபேதா தாக்கப் பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜியாவை கைது செய்தனர்.