மதுராந்தகம் |

கூடுதல் வகுப்பறை கட்டிடம் - செய்யூர் MLA திறந்து வைத்தார்

வெங்கம்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 85 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் - செய்யூர் எம். எல். ஏ - பனையூர் பாபு திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளியில் சுமார் 1400 மாணவ - மாணவிகள் பயில்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் போதிய இடவசதியின்றி அவதிப்பட்டு வந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி நிர்வாகம் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நபார்டு திட்டத்தின் மூலம் 85 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதியுடன் கூடிய 4 வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா ஒன்றிய சேர்மன் ஆர். டி அரசு தலைமையில் நடைப்பெற்றது. விழாவில் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி பாபு உள்பட ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு