அணைக்கட்டு - Anaicut

நீட் தேர்வு எழுதவுள்ள 7, 042 மாணவ- மாணவிகள்!

நீட் தேர்வு எழுதவுள்ள 7, 042 மாணவ- மாணவிகள்!

அகில இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேருவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தாண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 7, 042 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்கு வேலூர் சாய்நாதபுரம் வி. வி. என். கே. எம். சீனியர் செகண்டரி பள்ளி, டி. கே. எம். மகளிர் கலைக்கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, திருமலைக்கோடி ஸ்பார்க் சீனியர் செகண்டரி பள்ளி, சன்பீம் மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, வி. ஐ. டி. பல்கலைக்கழகம், சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி சி. பி. எஸ். இ. பள்ளி, வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, ராணிப்பேட்டை டி. ஏ. வி. பெல் பள்ளி, சோளிங்கர் வித்யாபீடம் சீனியர் செகண்டரிபள்ளி ஆகிய 12 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் தேர்வர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். பிற்பகல் 1. 30 மணிக்குள் மாணவர்கள் மையத்துக்குள் வர வேண்டும். அதன்பின்னர் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా