அணைக்கட்டு - Anaicut

வேலூர் நீதிமதின்றத்தில் ரவுடி ஜானி ஆஜர்!

வேலூர் நீதிமதின்றத்தில் ரவுடி ஜானி ஆஜர்!

வேலூர் காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜானி. பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுசொத்தை ரவுடி ஜானி சேதப்படுத்தியது தொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இதையொட்டி கடலூரில் இருந்து ஜானி பலத்த போலீஸ் காவலுடன் வேனில் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து ஜானி பலத்த காவலுடன் கடலூர் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా