தலைவர்களின் நினைவிடங்களில் மோடி மரியாதை

தலைவர்களின் நினைவிடங்களில் மோடி மரியாதை

3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று (ஜுன் 9) மாலை 7.15 மணிக்கு பதவியேற்க உள்ள நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி, சதைவ் அடல் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், மொரீசியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் 2,500 காவலர்கள், 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு, டெல்லி ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வீடியோஸ்

திருப்பூர்

பள்ளி வகுப்பறை கட்ட பூமி பூஜை
Jun 09, 2024, 02:06 IST/திருப்பூர்
திருப்பூர்

பள்ளி வகுப்பறை கட்ட பூமி பூஜை

Jun 09, 2024, 02:06 IST
திருப்பூர் 1-வது மண்டலம் 24-வது வார்டு சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தமிழக அரசின் மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளத்தில் 5 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 5 வகுப்பறைகளும் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 24- வது வார்டு மாமன்ற உறுப்பினரும், ம. தி. மு. க. மாநகர மாவட்ட செயலாளருமான ஆர். நாகராஜ் தலைமை தாங்கினார். மாநக ராட்சி அதிகாரி சரவணகுமார், பள்ளி ஆசி ரிய, ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.