காரைக்குடி |

கிராமிய கலையான மரக்கால் ஆட்டம் கற்கும் சிறுவர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கோவிலூர் நெசவாளர் காலணி பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம்மரக்கால் ஆட்டம் , கொக்கலி கட்டை ஆட்டம், கட்டைகால் ஆட்டம் என்று அழைக்கப்படும் மரக்கழியில் கால்களை கட்டிக் கொண்டு கொக்கு போல் உயர்ந்த கால்களில் ஆட்டமாடும் கிராமிய கலையில் பரிச்சயம் கொண்டவர் ஏனைய கலைகளான சிலம்பம், தப்பாட்டம், களியாட்டம், கருப்பராட்டத்திலும் தேர்ந்த கிராமிய கலைஞரான இவரின் தந்தை , தாத்தா வழியாக மூன்றாவது தலைமுறையாக இந்த கலைகளில் ஆர்வம் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வரும் மணிவாசகம்இந்த கலைகளை பரவலாக்க ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்கு கற்று தருகிறார்தரையில் ஒற்றை காலை தூக்கி நிற்க வே பயப்படும் குழந்தைகள் மத்தியில் கட்டை காலில் நொண்டியடிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்கியுள்ளார் பயிற்சியாளர் ஆபத்து நிறைந்த இந்த கட்டைக் கால் ஆட்டத்திற்கு சிறுவர்கள் அதிக ஆர்வம் காட்டி இவரது வகுப்புகளில் கலந்து கொண்டு கற்று வருகின்றனர்தங்களுக்கு வழங்கப்படும் கட்டைகளை எடுத்து வந்து வரிசையாக அடுக்கி அவற்றை பயிற்சியாளர் உதவியுடன் கால்களில் கட்டிக் கொண்டு பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்குழந்தைகளின் பெற்றோர் கூறும்போது ஆபத்தானது போல தோன்றினாலும் குழந்தைகள் ஆர்வம் காட்டுவதாலும் பாரம்பரிய கலை என்பதாலும் நல்ல பயிற்சியாளர் என்பதாலும் இதனை கற்று கொள்ள அழைத்து வந்தோம் என்கின்றனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு