திருவள்ளூர்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வரும் 29ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில், பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசி பணி நாளான 29ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அன்று கடைகள் திறந்து செயல்படும். 30ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு, 31ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை என்பதால் கடைகளுக்கு விடுமுறையாகும். இதனால் ரேஷன் பொருட்களை சனிக்கிழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு
சர்க்கரை நோயாளிகளுக்கு நன்னாரி சர்பத் நல்லதா?
Mar 27, 2025, 13:03 IST/

சர்க்கரை நோயாளிகளுக்கு நன்னாரி சர்பத் நல்லதா?

Mar 27, 2025, 13:03 IST
தென்னிந்தியாவில், அதிக மக்களால் விரும்பப்படுவது நன்னாரி சர்பத். ஒரு கிளாஸ் நன்னாரியில் 72 கலோரி, 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ளது. நன்னாரி சர்ப்பத்தின் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, முடக்கு வாதத்தை குறைக்கும். கல்லீரல் பாதிப்புகளை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். இரத்தம் சுத்திகரிக்கப்படும். நீரிழப்பை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை இல்லாத நன்னாரி சர்பத்தை குடிக்கலாம். கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மருத்துவரிடம் ஆலோசித்து நன்னாரி சர்பத் குடிக்கலாம். மண்பானையில் உள்ள நீரில் நன்னாரி வேறை சேர்த்தும் பயன்படுத்தலாம்.