தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
போடிநாயக்கனூர் |

தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தினால் தமிழ்நாட்டிற்கு சிறப்பு செலவின பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு. பி. ஆர். பாலகிருஷ்ணன், I. R. S. , (IT) (Rtd) அவர்கள், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள், தலைமையில் 33. தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகள் மற்றும் பிற தேர்தல் பணிகள் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியரகம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. உடன் தேர்தல் செலவின பார்வையாளர்கள் திரு. தர்ம்வீர் தண்டி, IRAS அவர்கள், திரு. கனீஸ்ட் யாசு, IRS(C&CA)அவர்கள், காவல் கண்காணிப்பாளர் திரு. ரா. சிவ பிரசாத், இ. கா. ப. , அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. ஜெயபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

வீடியோஸ்