காட்பாடி |

திருவலம் அருகே ரூபாய் 55, 000 பறிமுதல்

திருவலம் அருகே கார்னாம்பட்டு பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் வினோத் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனைகள் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் காட்பாடி கார்னாம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூபாய் 55, 000 பணத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்த பொழுது கார்னாம்பட்டு காலனியில் சீட்டு கட்டி சேர்த்து வைத்த பணம் என்று தெரிவித்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வீடியோஸ்