

மும்பை படகு விபத்து.. 13 பேர் பலி
மும்பை கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 101 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் மேலும் சிலரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.