அரியலூர் |

பீர் பாட்டில் மாயம்: பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அம்பலவர் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (39) தனியார் பேருந்து நடத்துனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24) சம்பவத்தன்று வேல்முருகன் அங்குள்ள ஏரிக்கரையின் மேல் படிக்கட்டில் அமர்ந்திருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த பிரகாஷ், வேல்முருகனிடம் இங்கு நான் வைத்து விட்டுச் சென்ற பீர் பாட்டில் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு வேல்முருகன் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் அங்கு வந்த பிரகாஷின் உறவினர்களான மூர்த்தி, பெரியசாமி ஆகிய இருவரும் அங்கு வந்துள்ளனர். பின்பு வேல்முருகனுக்கு பிரகாசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதை கண்ட மூர்த்தி, பெரியசாமி, பிரகாஷ் மூன்று பேரும் சேர்ந்து வேல்முருகனை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தாக்கிய பிரகாஷ், மூர்த்தி பெரியசாமி ஆகிய மூன்று பேரும் மீதும் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து மூர்த்தி, பெரியசாமி ஆகியோரை தேடி வருகிறார்கள்.

வீடியோஸ்


தமிழ் நாடு