அரக்கோணம் - Arakkonam

ரேஷன் கடைகளில் வெளியாட்கள் இருந்தால் நடவடிக்கை!

ரேஷன் கடைகளில் வெளியாட்கள் இருந்தால் நடவடிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட நல்லூர்பேட்டை, நெடும்புலி, அகவலம், மேலபுலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அவ்வப்போது பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், வெளியாட்கள் கடைக்குள் இருப்பதாகவும் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த நிலையில் பறக்கும் படை தாசில்தார் ரவி நேற்று ஒவ்வொரு கடையாக ஆய்வு செய்தார். அப்போது கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவற்றின் இருப்பு குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொருட்களின் இருப்பு அளவு அட்டைதாரர்களுக்கு தெரியும் வகையில் பலகையில் எழுதி வைக்கவேண்டும். வெளியாட்கள் கடைக்குள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా