குடிசை பிரியாணி கடையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு
*கரிமேடு பகுதியில் குடிசையால் அமைக்கப்பட்ட பிரியாணி கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் தகதகவென எரிந்து நாசம்! * திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (25) இவர் பார்சம் பேட்டை அருகே உள்ள கரிமேடு பகுதியில் குடிசை அமைத்து சிக்கன் பிரியாணி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களாக கடை திறக்கப்படாத நிலையில் இந்த குடிசையில் மர்ம நபர்கள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் கொளுத்தி போட்ட தீக்குச்சியின் காரணமாக குடிசை தக தகவென தீ பற்றி எரிந்தது. மேலும் அக்கம் பக்கத்தினர் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குடிசையின் மீது ஊற்றி தீயை அணைத்தனர் அதற்குள் குடிசை மற்றும் அதிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும் கடையில் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது