ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

நீரில் மூழ்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம்!

நீரில் மூழ்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம்!

ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் நீரில் மூழ்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்க ஒத் திகை நிகழ்ச்சி வாலாஜாவை அடுத்த பூண்டி மகான் ஆசிரமம் அருகே உள்ள குளத்தில் நடைபெற்றது. வாலாஜா நகராட்சி தலைவர் ஹரிணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமு ருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, நீரில் மூழ்கியவர்கள், தீயில் சிக்கியவர்கள், பேரிடர்ககாலங் களில் ஏற்படும் சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மற்றும் அவர்களுக்கு முதலு தவி சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து தத்ரூபமாக செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி செய்து காட்டினர். மேலும் ரப்பர் படகு மற்றும் கயிறு உள்பட பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி ஒத்திகை செய்து காட்டினர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా