![](https://media.getlokalapp.com/cache/a2/9b/a29bba323a08a8d809bbd929472d000d.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி வெளியீடு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செதுக்கரை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் மரம் ஏறும் வேலை செய்து வருகிறார். இதனிடையே வழக்கம் போல் இரவு தனது வீட்டுக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்பு காலையில் பார்த்த போது தனது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது இது குறித்து அவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் நகர போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் மர்மநபர்கள் இருவர் சாவகாசமாக வந்து இருசக்கர வாகனத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது