கூடலூர் |

நீலகிரி: அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து ஆனந்தமடைந்தனர்.. நீலகிரி மாவட்டம் கூடலூர் மட்டும் பந்தலூர் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் அணைகள் நிரம்பி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குறிப்பாக பந்தலூர் சாலையில் உள்ள நீர்மட்டம் பகுதியில் பசுமையான வனத்தில் இருந்து கொட்டும் அருவி கண்களுக்கு விருந்து படைக்கிறது. இதை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசிக்கின்றனர். மேலும் சமவெளி பகுதிகளில் அருவிகளில் மகிழ்ச்சியாக குளிப்பது போல் சில்லென்ற தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் குளித்து ஆனந்தமடைந்தனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு