மரணத்திலிருந்து நூலிழையில் தப்பிய பெண்கள்
ஒடிசா கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள பாட்பில் நகரில் கடந்த 11ம் தேதி ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. இரண்டு பெண்கள் சாலையைக் கடந்து வந்து சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, லாரி ஒன்று வேகமாக வந்து பெண்கள் மீது மோதிவிட்டு சென்றது. ஒரு பெண் லாரியின் இரண்டு சக்கரங்களுக்கு இடையில் விழுந்தார். மற்றொரு பெண் கீழே விழுந்து காயமடைந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தின் CCTV காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.