Thatstamil News in Tamil | Online Tamil News Today - Lokal Tamil

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை குஷ்பு

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை குஷ்பு

'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி-க்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கடந்த சில தினங்களாக ஒரு தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது படத்தின் ஒரு தயாரிப்பாளரான குஷ்பு மறுத்துள்ளார். “சுந்தர்-சியின் நலம் விரும்பிகளுக்கு... மூக்குத்தி அம்மன் 2 பற்றி தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. தயவுசெய்து அதை தவிர்த்து விடுங்கள். படப்பிடிப்பு சுமுகமாக திட்டமிட்டபடி நடந்து வருகிறது. சுந்தர் ஒரு முட்டாள்தனமான நபர் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் என பதிவிட்டுள்ளார்.