வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளிவிழா நடந்தது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு கேக் வெட்டினார். பின்னர் கேக்குகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி ஆணையர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.