தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம்
சேலம் நகரம் |

தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் - 1 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ. மேனகா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்புச் செயலாளர் திரு. முகமது இர்பான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. எம். ஜெகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு