ஆம்பூர் - Ambur

டியூப்களில் பதுக்கி சாராயம் விற்றவர் கைது!

டியூப்களில் பதுக்கி சாராயம் விற்றவர் கைது!

திருப்பத்தூர் மாவட்ட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புள்ளானேரி அருகே கோனேரி குப்பம் எம். எல். ஆர். வட்டம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியின் மகன் முரளி (36). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் 2 லாரி டியூப்களில் தலா 55 லிட்டர் விதம் 110 லிட்டர் கள்ள சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் முரளியை கைது செய்து, 110 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా