![](https://media.getlokalapp.com/cache/1d/a1/1da140bd9fe7f66aeb0ae46fa79f5877.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
ஆம்பூரில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு ஒருவர் படுகாயம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், மாங்காதோப்பு பகுதியில் பிரவீன் என்பவருக்கு சொந்தமான வீடு இரண்டாவது தளம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் 15 நாட்களுக்கு முன்பு மேற்கூரை கான்கிரீட் அமைத்து உள்ளனர் இதனைத் தொடர்ந்து இன்று கட்டிடத்தின் உள்ளே சென்ட்ரிங் பிரிக்கும் பணியில் (சென்ட்ரிங்) தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது கூலித் தொழிலாளி பச்சகுப்பம் பகுதியை சேர்ந்த ஜோதி பிரசாந்த் மீது மேற்கூரை கான்கிரீட் இடிந்து விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மீட்டு அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் பிரதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு மேலும் படுகாயமடைந்த பச்சகுப்பம் பஜனை கோயில் பகுதியை சேர்ந்த துளசிராமன் என்பவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.