![](https://media.getlokalapp.com/cache/93/ca/93ca9b8324e673a6bf493c6081089db5.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. வாலிபர் படுகாயம்.
கோவிந்தம் பாளையத்தில் டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. வாலிபர் படுகாயம். கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி பகுதியில் உள்ள தேர் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அருண் பாண்டியன் வயது 33. இவர் ஜூலை 15ஆம் தேதி காலை 11: 25- மணி அளவில், கோவிந்தம் பாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கோவிந்தம் பாளையம், மாருதி கோச் பின்புறம் சென்ற போது, எதிர் திசையில் கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு, அருகில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் முருகானந்தம் வயது 20 என்பவர், வேகமாக ஓட்டி வந்த தோஸ்த் சரக்கு வாகனம், அருண்பாண்டியன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த அருண்பாண்டியனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ராமன் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருண்பாண்டியன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல்துறையினர்.