கரூர் - Karur

கரூர் |

வாகன பேரணியுடன் இறுதி கட்ட பிரச்சாரம்- பிஜேபி துவக்கியது.

வாகன பேரணியுடன் இறுதி கட்ட பிரச்சாரம் பிஜேபி துவங்கியது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தை கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் இருந்து வாகன பேரணியுடன் துவக்கினார். அப்போது இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த பேரணியில் இளைஞர்கள், இளம்பெண்கள் இருசக்கர மோட்டார் வாகனத்தில் ஊர்வலமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடியை உயர்த்தி பிடித்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணி, பொன் நகர், அரசு கல்லூரி, சுங்க கேட், பசுபதிபாளையம், ஐந்து ரோடு, அரசு காலணி, வாங்க பாளையம், வெங்கமேடு, சர்ச் கார்னர், தின்னப்பா தியேட்டர், எம்ஜி ரோடு காமராஜபுரம், பைபாஸ் ரோடு, கோவை சாலை, கொங்கு மெஸ், வேலுச்சாமிபுரம், முனியப்பன் கோவில் வழியாக சென்று 80 அடி சாலையில் இந்த வாகன பேரணி நடைபெற உள்ளது. பேரணியின் போது பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேட்பாளர் செந்தில்நாதன் கையெடுத்து கும்பிட்டு பொதுமக்களிடம் கேட்டு ஓட்டு வேட்டையாடினார்.

வீடியோஸ்