

காஞ்சி: மருமகள் சீமந்தத்தன்று மாமனார் தற்கொலை; பரபரப்பு வீடியோ
செங்கல்பட்டில் மருமகள் சீமந்தத்தின்று மாமனார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்குட்பட்ட முருகேசனார் தெருவில் வசித்து வருபவர் பாலு. இவரது மகன் மூர்த்தி (53) இவர் மது போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இவரது மருமகளுக்கு இன்றைய தினம் செங்கல்பட்டு திரெளபதியம்மன் கோயிலில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூர்த்தியின் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்ததால் மூர்த்தியின் வீட்டில் யாருமில்லை. அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த மூர்த்தி தனது படுக்கையறை மின்விசிறியில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வளைகாப்பு விழேசத்திலிருந்து வீட்டுக்கு வந்த மூர்த்தியின் மகன் தனது அப்பா மூர்த்தி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தான். மூர்த்தியின் மகன் இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.