செங்கல்பட்டு டவுன் - Chengalpattu Town

செய்யூர்- போளூர் சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம்

செய்யூர்- போளூர் சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முதலியார்குப்பம், ஓதியூர், நயினார்குப்பம் உட்பட்ட பகுதியில் விவசாயமே பிரதான தொழிl. விவசாயிகள் கூடுதலாக கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இப்பகுதியில், 1, 000க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளின் உரிமையாளர்கள், தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காததால், அவை செய்யூர்- - போளூர் சாலையில் உலா வருகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், வயல்வெளிகளை கால்நடைகள் நாசம் செய்கின்றன. காவல்துறை சார்பாக, கால்நடைகளை கட்டுப்படுத்த பல முறை ஒலிபெருக்கிகள் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கால்நடைகள் கட்டுப்பாடு இன்றி, தொடர்ந்து சாலையில் உலா வருவது வழக்கமாக உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டுப்பாடு இன்றி சாலையில் உலா வரும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது, அபராதம் உள்ளிட்ட நடவடக்கைகள் எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా