தாம்பரம் - Tambaram

தீப்பற்றி எரிந்த தனியார் பஸ்

தீப்பற்றி எரிந்த தனியார் பஸ்

ஒரகடத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பேருந்து ஒன்று, அங்கிருந்து ஊழியர்கள் மூவருடன், நேற்று மாலை, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி சென்றது. திருவள்ளூரைச் சேர்ந்த ராஜி, 30, என்பவர், பேருந்தை ஓட்டினார். ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், வல்லக்கோட்டை அருகே வந்த போது, பேருந்தின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. உடனே, டிரைவர் ராஜி, பேருந்தை நிறுத்தியதும், தீப்பற்றி எரிய துவங்கியது. பேருந்தில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர். சற்று நேரத்தில் தீ, மளமளவென பேருந்து முழுதும் பரவி, கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து, தகவலின்படி வந்த ஒரகடம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள், பேருந்து முழுதும் தீயில் எரிந்து நாசமானது. இதனால், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை, ஒரகடம் போலீசார் சீர் செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా