

கோவூரில் அரசு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவூர், கொளப்பாக்கம், அய்யப்பந்தாங்கல் உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் மாங்காடு நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி கல்வித்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ. 21.86 கோடி மதிப்பீட்டில் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை கோவூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா. மோ. அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து வைத்தனர். இதை எடுத்து அந்தந்த பகுதிகளில் பள்ளி கட்டிடங்கள் அமைய உள்ள கட்டிட வரைபடங்கள் மாதிரி வரைபடங்களை பார்த்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. உடன் குன்றத்தூர் ஒன்றிய துணை சேர்மன் உமா மகேஸ்வரி வந்தேமாதரம், ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.