காஞ்சிபுரம் நகரம் - Kanchipuram City

செங்கையில் 70 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க... அனுமதி!

செங்கையில் 70 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க... அனுமதி!

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, அரசு தடை விதித்திருந்தது. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள ஏரிகளில் இருந்து, விவசாயம், மண்பாண்ட தொழில் பயன்பாட்டுப் பணிக்கு தேவையான வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை தேவைப்படும் நபர்கள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில், தண்ணீர் முற்றிலும் இல்லாத காலங்களில் மட்டும் தான் வண்டல் மண் எடுக்க வேண்டும். நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் வாயிலாக, வரைபடத்தில் அளவீடுகள் குறியீடு செய்யப்பட்ட பகுதியில் மட்டுமே, வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும். ஒரே இடத்தில் வெட்டி எடுக்காமல், பரவலாக எடுக்க வேண்டும். மாவட்டத்தில், செங்கல்பட்டு தாலுகாவில் நான்கு ஏரிகள், வண்டலுார் தாலுகாவில் ஒரு ஏரி, திருக்கழுக்குன்றம் பகுதியில் எட்டு ஏரி, திருப்போரூர் தாலுகாவில் இரண்டு ஏரிகள், செய்யூர் தாலுகாவில் 55 ஏரிகள் என, மொத்தம் 70 ஏரிகளில், விவசாய பணிக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என, மாவட்ட அரசிதழில், கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా