

நேத்தப்பாக்கத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நேத்தப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய வசந்தவாடி கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கோழி பண்ணையில் இருந்து வெளியேறும் கோழி கழிவுகள் அனைத்தும் இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் கலக்கிறது அந்தஏரியில் தான் குடிநீர் கிணறுகள் உள்ளன இந்நிலையில் தற்பொழுது தண்ணீர் மாசு அடைந்து நிறம் மாறி குடி நீரும் அசுத்தம்பெற்று தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது இதை குடிப்பதினால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தோல் நோய்கள் வருவதாகவும் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் நீங்கள் குடிக்கும் குடிநீரால்தான் ஏற்படுவதாகவும் தோல் நோய் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருகின்றன மேலும் கோழிப்பண்ணை உரிமையாளர் கோழிப்பண்ணை அருகே உள்ள கிராமத்திற்கு சொந்தமான குளத்திற்கு நீர்வரத்துக்கான கால்வாயை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் இந்த குளமும் தண்ணீரில் இல்லாமல் காய்ந்து வருவதாகவும் ஏரியில் உள்ள தண்ணீர் கோடை காலத்தில் குறைந்து வரும் போது இதுபோல மாசற்ற நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் எங்களுக்கு இரண்டு கிணறுகள் இருந்தும் குடிக்க தண்ணீர் இல்லை காசு கொடுத்து வாங்கவும் எங்களுக்கு வசதி இல்லை ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் பயனில்லை ஆகவே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கண்ணைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினர்