
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டு வரி வசூல் முகாம்
மார்ச் மாத இறுதிக்குள், வரியினங்களை, 100 சதவீதம் வசூலிக்க வேண்டும்' என, ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகாம் அமைத்து வரி வசூல் செய்யப்படுகிறது. அதன்படி, திருப்போரூர் ஒன்றியத்தில் தண்டலம் ஊராட்சியில் நேற்றும், நேற்று முன்தினமும், வரி வசூல் முகாம் நடந்தது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்தினர்.