மும்பையைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளரான 54 வயது நபர் உடலுறவு கொள்ளும்போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அவரது 35 வயது காதலன், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், செல்போன்களை திருடிவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மாரடைப்பு காரணமாக 54 வயது நபர் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும், செல்போன்களை திருடிய 35 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.