பல்லாவரம் - Pallavaram

சென்னை அருகே பெண் வீடியோ வெளியிட்ட போலீஸ்காரர் கைது

சென்னை அருகே பெண் வீடியோ வெளியிட்ட போலீஸ்காரர் கைது

சென்னை அடுத்த மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், ராஜராஜன் நகரில் வசிப்பவர் ஆனந்த், 38; கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலர். மனைவியை விவாகரத்து செய்த நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த பெண்ணுடன் ஆனந்த் நெருங்கிப் பழகிய நிலையில், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால், ஆனந்தை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஆனந்த், போதையில் குடியிருப்பு பகுதி வீடுகளின் கதவுகளை உடைத்து ரகளை செய்வதாக கூறப்படுகிறது. இரவில் பெண்கள் இருக்கும் வீடுகளின் கதவை தட்டி, அரை நிர்வாணமாக நின்று தொல்லை தருவதாக, அவர் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாங்காடு போலீசார் கடந்த மாதம், ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனந்த் பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த ஆனந்த், தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுத்துள்ளார். அந்த பெண் மறுக்கவே, ஆனந்துடன், அந்த பெண் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோ பதிவுகளை, பெண்ணின் உறவினர்களின் மொபைல் போனுக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆனந்தை போலீசார் நேற்று மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా