சிறுமியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் பூந்தண்டலம் கிராமம் பக்கிங்கம் கால்வாய் ஓரமாக சந்தேகத்து இடமாக உடல் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதாக சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த திருக்கழுக்குன்றம் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் சம்பந்தப்பட்ட இடத்தை தோண்டுவதற்கு உத்தரவிட்ட பிறகு இடத்தை தோண்டி பார்த்த பொது அடையாளம் தெரியாது 7 வயது பெண் குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது. புதைக்கப்பட்ட பெண் குழந்தை இறந்து 75 மணி நேரம் ஆகியிருக்கும் நிலையில் பெண் குழந்தை இயற்கையாக மரணம் அடைந்தாரா அல்லது பாலில் வன்புணர்வு செய்து உயிரிழந்தாரா என கண்டறிய சம்பவ இடத்திலேயே மருத்துவர் மணிகண்டன் ராஜ் தலைமையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது அதில் உயிரிழந்த சிறுமியின் உடலில் இருந்து முக்கிய பாகங்களை ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மீதமுள்ள உடல் பாகங்கள் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் முன்னிலையில் சம்பவம் இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவி அபிராம் ஆகியோர் சிறந்த சிறுமியின் உடலை நேரில் ஆய்வு மேற்கொண்டு இந்த வாழ்க்கை சம்பந்தமாக உடனடியாக தீர்வு காண வேண்டும் என காவல்துறை ஆய்வாளர்களுக்கு அருவருத்துச் சென்றார்.