![](https://media.getlokalapp.com/cache/c9/ee/c9ee1cda2b0f41b31979cbe0cf937541.webp)
![](https://amp.dev/static/samples/img/play-icon.png)
80 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா
நகராட்சிக்குட்பட்ட எம்ஜிஎம் நகர், ஏ எஸ் பி நகரில் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா, திருவள்ளூர் சட்டமன்றத் உறுப்பினர் திறந்து வைத்தார். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு மற்றும் 13 வது வார்டில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா திறப்பு விழா இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்றது. திருவள்ளூர் நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட எம். ஜி. எம் நகரில் ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை திறப்பு விழாவானது, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் எம்எல்ஏ வி. ஜி. ராஜேந்திரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்க திறந்து வைத்தார், அதனையடுத்து திருவள்ளூர் நகராட்சி 13-வது வார்டு ஏஎஸ்பி நகரில் ரூ. 33. 75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார். நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர மன்ற தலைவர் பொன் பாண்டியன், 11-வது வார்டு உறுப்பினர் வழக்கறிஞர் வி. இ. ஜான், இதில் 13 வது வார்டு உறுப்பினர் பத்மாவதி ஸ்ரீதர், உட்பட திமுக நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.