திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

திருவள்ளூர்: தெரு நாய்களின் உடல்களை தோண்டி பிரேத பரிசோதனை

திருவள்ளுரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட தெரு நாய்களின் உடல்களை அரசு கால்நடை மருத்துவர்கள் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்தனர். திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 13 வது வார்டுகளில் உள்ள ஜெயா நகர் காமாட்சி நகர் , காமாட்சி அவென்யூ. ஏ எஸ் பி நகர் செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக சுமார் 50க்கும் தெரு நாய்கள் ரத்த வாந்தி எடுத்து இறந்ததைத் தொடர்ந்து சிசிடிவி களை ஆய்வு செய்ததில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் நிர்வாகி வெற்றிவேந்தன் அத்தகைய நாய்களுக்கு பிரியாணியில் விஷம் கலந்த உணவை நாய்களுக்கு வைத்து கொன்றது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில். அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பராமரித்து வந்த இறந்த நாய்களை அவரின் வீட்டின் தோட்டத்திற்குள் புதைத்திருந்த நிலையில் அவற்றை திருவள்ளூர் கால்நடை மருத்துவமனையின் மருத்துவர் உமா அவர்களின் தலைமையில் மருத்துவர் விஷ்வேந்தர் உள்ளிட்டோர் நாய்களின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా