திருவாரூரில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், இந்திய விமான படையின் சூப்பர் சோனிக் போர் விமானம் பறந்ததால் ஏற்பட்ட அதீத சத்தம்தான் இதற்கு காரணம். நில அதிர்வு இல்லை என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.