அம்பத்தூர் - Ambattur

ஆவடி: ஓடும் ரயிலில் தங்க சங்கிலி பறித்தவர் கைது

ஆவடி அடுத்த பட்டாபிராம், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சபர்மதி வயது 47 செவிலியர். இவர் கடந்த 7ம் தேதி இரவு பணி முடிந்து மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில் நின்று கிளம்பும் போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் சபர்மதி கழுத்தில் இருந்த ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 5.5 சவரன் தாலி செயினை மர்ம நபர் பறித்து தப்பினார்.  இது குறித்து சபர்மதி கொடுத்த புகாரின் பேரில் விசாரனை மேற்கொண்ட ஆவடி ரயில்வே போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரைச் சேர்ந்த சுந்தரேசன்/23 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా