

50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி மனு
திருவள்ளூர் அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்து பூண்டி ஒன்றியம், நெய்வேலி ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகர், பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் 100 குடும்பங்கள் ஆதிதிராவிடர் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றன, இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட நிலையில் விடுபட்ட 27 குடும்பங்களுக்கு பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடமும், அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதனால் அரசு வழங்கப்படும் இலவச வீடுகள் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் குடியிருப்பு வீடுகளுக்கு மின் இணைப்புகள் பெற முடியவில்லை என்று மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளர், நீலவானத்து நிலவன், மற்றும் திருவள்ளூர் மைய மாவட்ட செயலாளர் அருண் கௌதம் , ஆகியோரின் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் விடுபட்டு உள்ள 27 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விரைவில் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.