சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு NH 205 தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனத்தில் இருந்து நகரி nh716 பி ரயில் பாதை திட்டங்களுக்காக நிலம், வீடு, கடைகள், மரங்கள், ஆகியவற்றைகளை இழந்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஆகியரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இழப்பீட்டிற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தும் பணம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் செய்வதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே நடத்தப்பட்டதால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பின்னர் விடுவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி