

மத்திய அமைச்சர் உருவ பொம்மை எரித்து திமுகவினரால் பரபரப்பு
பொன்னேரி பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து பாலூற்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரால் பரபரப்பு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரீகம் இல்லாதவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள் தமிழர்கள் என கூறியதை கண்டித்தும் அவர் பதவி விலக வலியுறுத்தி ஹிந்தி திணிப்பை கைவிட வேண்டும் பொன்னேரி அம்பேத்கர் சிலையிலிருந்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கல்வி அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் உருவ பொம்மைக்கு தீ மூட்டி பால் ஊற்றினர் பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் தண்ணீர் கொண்டு ஊற்றி உருவ பொம்மையை அணைத்தனர் காரணமாக பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது