வேலூர் மாவட்டம் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வயதான தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த லாரி உரசியதில் இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் மூதாட்டி, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் சடலத்தை உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.