திருச்சி மாவட்டம் ஓலையூரில் உயர்மின் கோபுரத்தில் பணியாற்றிய போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்தனர். ஒப்பந்த ஊழியர் கலாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில், மாணிக்கம் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.