மத்திய அரசைக் கண்டித்து வரும் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.4034 கோடியை விடுவிக்கவில்லை எனவே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.